அமைதியில்
உறங்கியெழுந்து
கரையோர அலைகளில்
நுரைப் பூக்களாய் தவழ்ந்து
செவி துளைக்கும்
காற்றின் மணம்
நுகர்ந்து மிதந்து
வண்ண மணல் பரப்பினில்
முகம் புதைத்து
சின்னஞ்சிறு
வளை நண்டுகளோடு
ஓடி ஒளிந்துக் கொட்டமடித்து
துறு துறு எண்ணங்களை
நீலவான் பரப்பினில்
சிதறடித்து
... ஒரு துள்ளல்
வாழ்க்கை வாழ்ந்து மகிழ...
-- இக்கணமே
ஒரு குழந்தையாதல் வேண்டும்!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக