Powered By Blogger

15 அக்டோபர், 2020

குழந்தையாதல் வேண்டும்




ஆழ்கடலின்
அமைதியில்
உறங்கியெழுந்து
கரையோர அலைகளில்
நுரைப் பூக்களாய் தவழ்ந்து
செவி துளைக்கும்
காற்றின் மணம்
நுகர்ந்து மிதந்து
வண்ண மணல் பரப்பினில்
முகம் புதைத்து
சின்னஞ்சிறு
வளை நண்டுகளோடு
ஓடி ஒளிந்துக் கொட்டமடித்து
துறு துறு எண்ணங்களை
நீலவான் பரப்பினில்
சிதறடித்து
... ஒரு துள்ளல்
வாழ்க்கை வாழ்ந்து மகிழ...
-- இக்கணமே
ஒரு குழந்தையாதல் வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக