கொரோனாவா?
வந்து பாரு என்கிறார்கள்
சென்னைவாசிகள்...
சென்னையில் யாரும் அடங்கவில்லை.
நேற்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இங்கே சென்னையில் பொதுமக்களில் பலரும், மளிகை, காய்கறி, மீன் மார்க்கெட், கோழிக் கடைகளில் சமூக இடைவெளியெல்லாம் கடைப்பிடிக்கவில்லை.
காய்கறிக் கடைகளுள் முண்டியடித்துக் கொண்டுதான் நிற்கிறார்கள். நாம், மதிப்பளித்து வரிசையில் நின்று அவர்கள் வெளியே வரட்டும், பிறகு நாம் செல்லலாம் என்று காத்திருந்தால், நமக்கு பின்னால் வருபவர் அவர் வரிசையைக் கருத்திற் கொள்ளாமல் நம்மை முந்திக் கொண்டு கடைக்குள் போகிறார். என்ன நாகரிகம் என்றே புரியவில்லை.
கையில் ஆப்பிள் போன், அரை டவுசர், பேசுவது ஆங்கிலம் என்ற உயர்தட்டின் குணங்களைக் கொண்டிருந்தும் அவருக்கு அடிப்படையான புத்தி கூட இல்லையெனும் நிலையை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.
முகக் கவசம் அது மூக்கிற்கும் கீழ் இருந்தால் கூட பரவாயில்லை எனும்பட்சத்தில், தாடையில் தொங்கிக் கிடக்கின்றது.
அரசாங்கம் எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நம் சுயத்தை காற்றில் பறக்க விட்டோமோ?
நமக்கென்று பொறுப்பு இல்லை. கடமையுணர்வு இல்லை. அக்கரை இல்லை. குறைந்தபட்ச விழிப்புணர்வு இல்லை. பயமில்லை.
எப்படி கொரோனா ஒழியும்?
போலீஸ் தடி எடுத்த போதெல்லாம், சமூகங்களெல்லாம் கதறினோம். சாலையின் நடுவே வைத்து தண்டித்த போதெல்லாம் கோஷம் எழுப்பினோம்.
ஆனால், எனக்கென்னவோ கொஞ்சம் கடுமை காட்டினால் தான் இங்கே சென்னை மக்கள் அடங்குவார்கள் போலிருக்கிறது.
நேற்று பாருங்கள், ஒரு குடிகாரன் போலீஸ் காரர்களிடம் சாலையில் நின்று தகராறு செய்கிறான். ஐந்து வருடம் எங்களை ஒன்றும் செய்ய இயலாது என்று சவால் விடுகிறார். காவல் துறையினரும் அசாத்திய பொறுமை காக்கின்றனர். ஆளுங்கட்சி அமைச்சரிடம், எம்எல்ஏ.விடம் நாம் வளைவது எதார்ததம். ஆனால், தெருவில் நின்று பிதற்றும் குடிகாரர்களிடம் ஏன் காவல்துறை கைகட்டி நிற்கின்றதோ?
திரிபாதி சார்.... ஈவிரக்கம் காட்டாதீர். கொஞ்சம் வந்து லேசாய் லட்டியைத் தூக்கி தரையில் தட்டியாவது பயங்காட்டி அடக்குங்கள் இந்த சென்னை கொரோனா பரப்பாளர்களை...
புண்ணியமாகப் போகும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக