Powered By Blogger

04 டிசம்பர், 2019

காடு வாழ்க

தொலைதூரப் பயணத்தின் இடையே 
ஒரு மரத்தின் நிழலில்
இளைப்பாறுகிறேன்

அந்த அடர்வனத்தின்
மணமிகுத்த காற்று 
என் முகத்தை
வருடி விட்டுப் போகின்றது

சலசலக்கும் ஓடை தரும் ஓசையின்
துள்ளொலிகள்
செவிகளுள் மெலிதாய் ஒலிக்கும் 
இசைச் சாரல்.

கனவுகளை துளிர்க்கச் செய்யும் 
பறவைகளின் சிறகொலிகள்

மலர்கள் என் கண்களை
தழுவிக் கொண்டன
காய்களும் கனிகளும்
அமுதமாய் தெரிந்தன

வெண்மேகங்களின் பரிவாரம்
வனத்தையே நீர்க்குடையாய்
போர்த்தி விட்டிருந்தது

இடையிடையே நிலவும்
அந்த...
அமைதியின் வரவு
மனதினுள் 
மவுனத்தை விதைத்துப் போயின

உள்ளம் 
என்னுள் படிந்திருந்த 
களைப்பையெல்லாம்
விழுங்கியிருந்தது 

இன்னும் சிறிது காலம்
இந்த காட்டிலேயே
இப்படியே
நான் கொஞ்சம்
வாழ்ந்து கொள்ளட்டுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக