ஒரு மரத்தின் நிழலில்
இளைப்பாறுகிறேன்
அந்த அடர்வனத்தின்
மணமிகுத்த காற்று
இளைப்பாறுகிறேன்
அந்த அடர்வனத்தின்
மணமிகுத்த காற்று
என் முகத்தை
வருடி விட்டுப் போகின்றது
சலசலக்கும் ஓடை தரும் ஓசையின்
துள்ளொலிகள்
செவிகளுள் மெலிதாய் ஒலிக்கும்
வருடி விட்டுப் போகின்றது
சலசலக்கும் ஓடை தரும் ஓசையின்
துள்ளொலிகள்
செவிகளுள் மெலிதாய் ஒலிக்கும்
இசைச் சாரல்.
கனவுகளை துளிர்க்கச் செய்யும்
கனவுகளை துளிர்க்கச் செய்யும்
பறவைகளின் சிறகொலிகள்
மலர்கள் என் கண்களை
தழுவிக் கொண்டன
காய்களும் கனிகளும்
அமுதமாய் தெரிந்தன
வெண்மேகங்களின் பரிவாரம்
வனத்தையே நீர்க்குடையாய்
போர்த்தி விட்டிருந்தது
இடையிடையே நிலவும்
அந்த...
மலர்கள் என் கண்களை
தழுவிக் கொண்டன
காய்களும் கனிகளும்
அமுதமாய் தெரிந்தன
வெண்மேகங்களின் பரிவாரம்
வனத்தையே நீர்க்குடையாய்
போர்த்தி விட்டிருந்தது
இடையிடையே நிலவும்
அந்த...
அமைதியின் வரவு
மனதினுள்
மனதினுள்
மவுனத்தை விதைத்துப் போயின
உள்ளம்
உள்ளம்
என்னுள் படிந்திருந்த
களைப்பையெல்லாம்
விழுங்கியிருந்தது
விழுங்கியிருந்தது
இன்னும் சிறிது காலம்
இந்த காட்டிலேயே
இப்படியே
நான் கொஞ்சம்
வாழ்ந்து கொள்ளட்டுமா?
இந்த காட்டிலேயே
இப்படியே
நான் கொஞ்சம்
வாழ்ந்து கொள்ளட்டுமா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக