என் அம்மாவுக்கு பிரசவமாகி,
தம்பி பிறந்து ஆஸ்பத்திரியில் இருந்த சமயம்,
என் உடம்பெல்லாம்
அம்மை நோய் வந்து
அநாதையாய்
வீட்டில் வீழ்ந்து கிடந்தப் போதில்,
பக்கத்து வீட்டு
மாரியாத்தா பக்தைகள் எல்லாம்
அச்சம் கொண்டு அலறிப் புடைத்தோட...
என்னை வாரியணைத்துத்
தொட்டுத் தூக்கி
தன் வீட்டில் கிடத்தி
உடலெங்கும் வேப்பிலைப் பூசி
மஞ்சள் நீர் கொண்டு குளியாட்டி
இன்னும் எல்லாவித
இந்து முறைமைகளையும்
ஒன்று விடாமல் செய்து
என் உயிர் காத்தவள்...
என் இரண்டாம் வகுப்பு
பள்ளித் தோழியான
ஸ்டெல்லா பிரிஜ்ஜிட்டாவின்
அம்மா அற்புத மேரி!
அம்மை என்பது
மரியம்மை பக்தைகட்கு மட்டும் சும்மா தானோ!
மாரியம்மாவுக்கு மட்டும் மல்லுக்கு நிற்குமோ என்ன?
மதமாவது மண்ணாங்கட்டியாவது
போங்கடா !!
மனிதமே மதம் வேறன்றி நானறியேன்!
தம்பி பிறந்து ஆஸ்பத்திரியில் இருந்த சமயம்,
என் உடம்பெல்லாம்
அம்மை நோய் வந்து
அநாதையாய்
வீட்டில் வீழ்ந்து கிடந்தப் போதில்,
பக்கத்து வீட்டு
மாரியாத்தா பக்தைகள் எல்லாம்
அச்சம் கொண்டு அலறிப் புடைத்தோட...
என்னை வாரியணைத்துத்
தொட்டுத் தூக்கி
தன் வீட்டில் கிடத்தி
உடலெங்கும் வேப்பிலைப் பூசி
மஞ்சள் நீர் கொண்டு குளியாட்டி
இன்னும் எல்லாவித
இந்து முறைமைகளையும்
ஒன்று விடாமல் செய்து
என் உயிர் காத்தவள்...
என் இரண்டாம் வகுப்பு
பள்ளித் தோழியான
ஸ்டெல்லா பிரிஜ்ஜிட்டாவின்
அம்மா அற்புத மேரி!
அம்மை என்பது
மரியம்மை பக்தைகட்கு மட்டும் சும்மா தானோ!
மாரியம்மாவுக்கு மட்டும் மல்லுக்கு நிற்குமோ என்ன?
மதமாவது மண்ணாங்கட்டியாவது
போங்கடா !!
மனிதமே மதம் வேறன்றி நானறியேன்!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக