Powered By Blogger

11 ஜூன், 2021

"இந்தி நஹி மாலும்"


இந்த அறிவாளி பதிவர் யாரென்று தெரியவில்லை.

இந்தி படிப்பது அவரவர் விருப்பம்.
அது தப்பில்லை.

பிணத்தின் சாம்பல் கரைக்கவெல்லாம் இந்தி படிக்கச் சொல்கிறாரே, இந்த பதிவருக்கு நிஜமாவே அறிவு இருக்கா? தெரியவில்லை. 

முதலில் ராமேஸ்வரம் வருகின்ற வடநாட்டவரை எல்லாம் தமிழ் கற்றுக் கொண்டு வரச்சொல்லட்டும் பார்ப்போம்.

ஏக், தோ, தீன், ச்சார், பாஞ்ச்...
மேரா, தும், நஹி, க்யா, ஹைய்... தவிர வேறெந்த இந்தி வார்த்தையும் தெரியாத நான்,
என் அலுவலக ரீதியான வேலைகளுக்காக ஆறு வருடங்கள் மாதம் ஒரிரு தடவையாவது டெல்லி போய் வந்திருக்கிறேன்.
எத்தருணத்திலும் எங்கும் எனக்கு இந்தி தேவைப்படவில்லை.
அதனால், எங்கும் எவரிடமும் தடுமாறி அல்லல் படவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்பு குடும்பத்தோடு டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், டேராடூன், முசோரி என வடமாநிலங்களில் காரில் பயணித்து ஓட்டல்களில் தங்கி சாப்பிட்டு ஒரு வாரத்திற்கும் மேலாய் சுற்றி...
ஒரு சுகமான, ஹிந்தியில்லா இன்பச்சுற்றுலா அனுபவித்து வந்தோம்...

பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம் என...
அடுத்ததொரு சுற்றுலா கூட போகப் போகிறோம்... 
"இந்தி நஹி மாலும்" என்ற கோஷத்தோடு...  






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக