Powered By Blogger

25 ஜனவரி, 2022

வளமும் விவசாயமும்

1990-கள்...


நான் திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் திருக்காட்டுப்பள்ளியை ஒட்டிய சில கிராமங்களில் களப்பணி புரிந்தேன்.

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் கண்டியூரில் இருந்து இடதுபுறமாக திரும்பினால் திருக்காட்டுப்பள்ளி சாலை. காலையில் தஞ்சாவூரில் இருந்து பேருந்தில் புறப்பட்டு கண்டியூர் அடுத்து நடுக்காவேரி தாண்டினால் குடமுருட்டி ஆற்றின் கரை ஒட்டியே வரும்

கருப்பூர் என்ற சிற்றூரில் இறங்கி அங்கே ஒரு சைக்கிள் கடையில் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு வரகூர் கடம்பங்குடி கழுமங்கலம் அம்மையகரம் அடஞ்சூர் என்று கிராமங்களுக்கு சுற்றிவிட்டு திருக்காட்டுப்பள்ளி வந்து அங்கு ஒரு கடையில் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் மைக்கேல்பட்டி வழியாக கருப்பூர் வந்து சைக்கிளை விட்டு விட்டு மீண்டும் பஸ் ஏறி ஊருக்கு வருவதுண்டு.
அந்தப் பகுதியே ஒட்டுமொத்தமாய் பச்சைப் பசேலென பரந்து விரிந்த எழில் மிகுந்த வளம் மிக்க கிராமங்கள்.

அருகருகே காவிரியும் குடமுருட்டியும் ஓடி சிற்றூர்களை செழிக்கச் செய்யும் பகுதி. இந்த இரண்டு ஆற்றின் நடுவே கூட ஒரு கிராமம் இருக்கிறது. அதன் பெயர் வளப்பக்குடி. பெயருக்கு ஏற்ற மாதிரி எந்த நாளும் வளப்பமாக திகழும் ஊர் அது. 365 நாளும் விவசாயம் நடைபெறும் ஒரு அழகிய கிராமம் அது.

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருச்சி சாலையில் பயணித்தால் கல்லணை.

திருக்காட்டுப்பள்ளி ஆகட்டும் மைக்கேல் பட்டி ஆகட்டும் அல்லது, அதனை சுற்றி அமைந்துள்ள அத்தனை கிராமங்கள் ஆகட்டும் எல்லாம் வளம்மிக்க அமைதியான அழகான சிற்றூர்கள்...

எல்லா மக்களும்
எல்லா நாட்களிலும்
கடும் உழைப்பாளிகள்.

பின்குறிப்பு:-
இப்போது ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கும்

மதமாற்ற பிரச்சினைக்கும் இந்தப் பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லையாக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக