Powered By Blogger

15 அக்டோபர், 2020

யாருக்கும் வெட்கமில்லை


வருடா வருடம் இந்த தீபாவளி வந்து தொலைக்கிறது, வெட்கமேயில்லாமல்.
ஆம், இந்த மாதிரி தரங்கெட்ட சாலையில் மக்கள் கூடுவார்கள், ஜவுளி எடுக்க மக்கள்
இந்த தி.நகர் ரெங்கநாதன் சாலையில் கும்பல் கும்பலாய் நடப்பார்கள்.
இதை அறிந்தும் வருடந்தோறும் வந்து தொலையும் தீபாவளிக்கு வெட்கமில்லை.
மழைக்கும் வெட்கமில்லை.
வருடந்தோறும் இப்படியான சாலையில் பெய்து விட்டு போகிறோமே, இதை எந்த நாதாரியும் ஏறிட்டுப் பார்த்து சீர் செய்யப் போவதில்லை. இங்கே வந்து பெய்து தெலைக்கிறோமே என்று மழைக்கும் வெட்கமில்லை.
மக்களுக்கும் வெட்கமில்லை.
நாமும் ஒரு விடுமுறை நாள் விடாமல் கடைத்தெரு சுற்ற வந்து விடுகிறோம். பல வருடங்களாக இந்த சாலை இப்படித்தான்
சேறும் சகதியுமாய்
குண்டும் குழியுமாய்
கேவலமாய் கிடக்கின்றதே, கொஞ்சம் அடங்கித் தான்
வீட்டில் கிடப்போமே என்றில்லை. இல்லை, இந்த அவலத்தை தட்டிக் கேட்டு சரி செய்ய முயல்வோம் என்பதுமில்லை. ஆக, மக்களுக்கும் வெட்கமில்லை.
வணிகர்களுக்கும் வெட்கமில்லை.
மழை பெய்யும் போதெல்லாம், இப்படி இந்த சாலை நாறிப் போகிறதே. இதை சரி செய்ய ஏதாவது செய்து தொலைப்போம். மக்கள் ஏதோ ஒரு நாள் வருகிறார்கள். நாம் தானே இங்கே நிரந்தரவாசிகள்.
இந்த சாலையில் வணிகம் செய்யும்.அனைவரும் ஒன்று சேர்ந்தால் இதை சரி செய்வது ஒன்றும் இயலாத காரியமில்லை.
ஆனாலும் ஆண்டாண்டாய் இச்சாலையை கேவலமாய் வைத்து தம் வியாபார லாபத்தை மட்டும் பார்க்கும் இவர்களும் வெட்கமில்லாதவர்கள் தானே.?
மாநகராட்சிக்கும் வெட்கமில்லை.
இத்தனை இலட்சம் மக்கள் வந்து போகிற இடமாச்சே. இதை நாம் தானே சரி செய்ய வேண்டும்.
இது நம் கடமை தானே?
நம்மைத் தானே மக்கள் காறித் துப்புவார்கள் என்று இந்த மாநகராட்சி அலுவலர்களுக்கும் துளியும் வெட்கமில்லை.
(அடச்சை... இதுக்கு பேரு
The Greater Chennai Corporation..வேறு!)
அரசியல்வாதிக்கும் வெட்கமில்லை...
அய்யே... அவர்களுக்கு ஆதியிலிருந்தே ஏன், கிருஷ்ண பரமாத்மா காலத்திலிருந்தே வெட்கம் என்பது அறவே இல்லையே.
ஆக, யாருக்கும் வெட்கமில்லை.



குழந்தையாதல் வேண்டும்




ஆழ்கடலின்
அமைதியில்
உறங்கியெழுந்து
கரையோர அலைகளில்
நுரைப் பூக்களாய் தவழ்ந்து
செவி துளைக்கும்
காற்றின் மணம்
நுகர்ந்து மிதந்து
வண்ண மணல் பரப்பினில்
முகம் புதைத்து
சின்னஞ்சிறு
வளை நண்டுகளோடு
ஓடி ஒளிந்துக் கொட்டமடித்து
துறு துறு எண்ணங்களை
நீலவான் பரப்பினில்
சிதறடித்து
... ஒரு துள்ளல்
வாழ்க்கை வாழ்ந்து மகிழ...
-- இக்கணமே
ஒரு குழந்தையாதல் வேண்டும்!