குறுகலான காய்கறிக் கடையில்
என் முறைக்காக
வரிசையில் காத்திருக்கையில்
ஒரு இளம்பெண் எங்களைக் கடந்து
"சமூக இடைவெளியாவது மண்ணாவது" என்பதாக உள்ளே செல்கிறாள்...
முகக் கவசத்தை தன் தாடையில்
அணிந்திருக்கிறாள்.
கையில் பையும் இல்லை.
கடைக்காரரிடம் "கேரி பை இருக்காண்ணா" எனக் கேட்கிறாள்.
கடைக்காரரிடம் "கேரி பை இருக்காண்ணா" எனக் கேட்கிறாள்.
ஃபோனில் ஆங்கில உரையாடல்.
உடையிலும் உதட்டுச் சாயத்தினாலும்
உடையிலும் உதட்டுச் சாயத்தினாலும்
தன்னை மேல்தட்டென்றும்
மெத்தப் படித்தவளென்றும் காட்டியது...
இவள் படித்து என்ன பயன்?
இந்த மாதிரி
பொறுப்பில்லாதவர்கள் இருக்கும் வரை
எத்தனை மாண்புமிகு முதல்வர்கள் வந்தாலும்
எத்தனை மாண்புமிகு சுகாதார அமைச்சர்கள் வந்தாலும்
எத்தனை துறைச் செயலர் IASகள் வந்தாலும்
எத்தனை மாநகர ஆணையர் IASகள் வந்தாலும்
எத்தனை மருத்துவர்கள், போலிஸ்காரர்கள்,
பொறுப்பில்லாதவர்கள் இருக்கும் வரை
எத்தனை மாண்புமிகு முதல்வர்கள் வந்தாலும்
எத்தனை மாண்புமிகு சுகாதார அமைச்சர்கள் வந்தாலும்
எத்தனை துறைச் செயலர் IASகள் வந்தாலும்
எத்தனை மாநகர ஆணையர் IASகள் வந்தாலும்
எத்தனை மருத்துவர்கள், போலிஸ்காரர்கள்,
முன்களப் பணியாளர்கள் என
ஊழியர்கள் உயிர் கொடுத்து பணிபுரிந்தாலும்...
எத்தனை ஆண்டானாலும்
எந்த ஆண்டவனாலும்
கொரோனாவை
ஒழிக்கவே முடியாது...
முடியவே முடியாது...
எந்த ஆண்டவனாலும்
கொரோனாவை
ஒழிக்கவே முடியாது...
முடியவே முடியாது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக