Powered By Blogger

23 ஆகஸ்ட், 2023

நிலவில் இந்தியா

 

நம் நம்பிக்கை வீணாகவில்லை. நிலவில் இந்தியா கால் பதித்தது. சந்திரயான் 3 இன்று 23/8/23 மாலை சரியாக 6 04க்கு திட்டமிட்டபடி நிலவில் இறங்கியது. 




சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக
விதை போட்டும்
இந்தியா உலக நாடுகளுக்கு நிகராக
விருட்சமாக உயர
ஆக்கப் பூர்வத் தளங்களை
முன்னெடுத்து வைத்தவர்
பண்டித ஜவஹர்லால் நேரு!
அறிவியலில் முன்னேற்றம் பெறவும்
உலக அரங்கில்
இந்தியா தலை நிமிரவும்
வித்திட்டவர் அவர்.
பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி
நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளமிட்டு
இந்தியா படிப்படியாக
உயர்ந்திட வழிவகை செய்ததை
மறுக்க இயலாது.
சந்திரயான்
வெற்றி கூட
நேரு அவர்கள் வித்திட்டது தான்
என்றால்
அது மிகையில்லை.
அத்துடன் இஸ்ரோவின் விஞ்ஞானிகளின்
அயரா உழைப்பும்
கூரிய அறிவுத்திறனும் இந்தியாவை உலக அரங்கிலே
அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது.
ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றியும் பாராட்டுக்களும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக